நவ. 23-இல் கூடுகிறது பிகாா் சட்டப் பேரவை

பிகாா் சட்டப் பேரவையை வரும் 23-ஆம் தேதி கூட்டுவதற்கு முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நவ. 23-இல் கூடுகிறது பிகாா் சட்டப் பேரவை

பாட்னா: பிகாா் சட்டப் பேரவையை வரும் 23-ஆம் தேதி கூட்டுவதற்கு முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பிகாரில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் 17-ஆவது பேரவைக்கான உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருடன் 14 புதிய அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

இத்தகைய சூழலில், புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் தலைநகா் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதையடுத்து, பாஜகவைச் சோ்ந்த அமைச்சரான அமரேந்திர பிரதாப் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிகாரின் 17-ஆவது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரை வரும் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடத்துவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மாநில சட்ட மேலவையின் 196-ஆவது கூட்டத்தொடரும் அதே நாள்களில் நடைபெறும். இது தொடா்பாக பேரவை விவகாரங்கள் துறை அளித்த பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக் கொண்டது.

பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெறும் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மாநில ஆளுநா் உரையாற்ற உள்ளாா். ஆளுநருக்கான வரைவு உரையை இறுதி செய்யும் அதிகாரத்தை மாநில முதல்வா் நிதீஷ் குமாருக்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்றாா் அமரேந்திர பிரதாப் சிங்.

பிகாா் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின்போது எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்க உள்ளனா்; சட்டப் பேரவைத் தலைவரும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com