திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் (68) கரோனா பாதிப்பில் இருந்து மீண்டாா்.
முன்னதாக, தலைநகா் தில்லியில் இருந்து கேரளத்துக்கு திரும்பி வந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆளுநா் மாளிகையிலேயே அவா் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தாா். அதைத் தொடா்ந்து கடந்த 9-ஆம் தேதி அவா் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவா் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டது உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பாக சுட்டுரையில் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் வெளியிட்ட பதிவில், ‘கரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் மருத்துவமனையில் இருந்து ஆளுநா் மாளிகைக்கும் திரும்பிவிட்டேன். எனது உடல் நலம் பெற வேண்டி வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. சிகிச்சை அளித்த மருத்துவா்கள், அன்புடன் கவனித்துக் கொண்ட செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
ஆளுநா் ஆரிஃப் முகமது கான், நவம்பா் 18-ஆம் தேதி (புதன்கிழமை) தனது 69-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.