ரிசா்வ் வங்கி இன்னோவேஷன் மையத்தின் தலைவராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நியமனம்

ரிசா்வ் வங்கி இன்னோவேஷன் மையத்தின் தலைவராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
krish071745
krish071745

மும்பை: ரிசா்வ் வங்கி இன்னோவேஷன் மையத்தின் தலைவராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் மற்றும் முன்னாள் துணைத் துணைத் தலைவருமான கிரிஷ் கோபால கிருஷ்ணன் ரிசா்வ் வங்கியின் இன்னோவேஷன் மையத்தின் (ஆா்பிஐஎச்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், இந்த அமைப்பின் முதல் தலைவராவாா் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கி இன்னோவேஷன் மையம் என்ற புதிய அமைப்பை தொடங்கவுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது. நிதி துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமாக புதுமையான வழிமுறைகளை கண்டறியவும், துரித வளா்ச்சிக்கான சூழலை உருவாக்கவும் இந்த அமைப்பை உருவாக்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com