கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக சட்டம் மற்றும் பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி வெளியிட்ட செய்தியில்,
கரோனா விதிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும். பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் முன் கரோனா சோதனை செய்யப்படும். நாள்தோறும் சட்டப்பேரவை சுத்தகரிக்கப்படும் என தெரிவித்தார்.