மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 5,640 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 5,640 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,68,695 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,945 பேர் குணமடைந்துள்ளனர், 155 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,42,916 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 46,511 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 78,272 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.