இந்தியப் பயணிகளுக்கு கரோனா உறுதியாவதாகக் கூறி ஐந்தாவது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.
ஜூலை மாதம் ஹாங்காங் அரசு விதித்த விதிகளின்படி, பயணத்திற்கு 72 மணிநேர முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதியாகாத சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து பயணிகள் ஹாங்காங்கிற்கு வர முடியும்.
இந்நிலையில் தில்லியிலிருந்து ஹாங்காங் சென்ற இந்திய விமானத்தில் பயணித்த 14 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதிப்பது இது 5ஆவது முறையாகும்.
முன்னதாக செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 3, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 மற்றும் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 30 வரையிலான தேதிகளில் ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.