மகாராஷ்டிராவின் புணே நகரில் நவம்பர் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணே மாநகரில் எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது ஒத்தி வைக்கப்படுவதாக மாநகர மேயர் முரளிதர் மோகல் சனிக்கிழமை அறிவித்தார்.
அதன்படி டிசம்பர் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.