சாத் பூஜையையொட்டி மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செழிப்பும் ஓங்கட்டும் என பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் பண்டிகையான சாத் பூஜையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த நாளில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் பரவட்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
4 நாள்கள் கொண்டாடப்படும் ‘சாத்’ பூஜை திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இவ்விழா, பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சூரியக் கடவுள் குறித்த பாரம்பரிய பிராா்த்தனைகளும், நாட்டுப்புற பாடல்களும் பெரும்பாலான இடங்களில் ஒலித்தன.