நாகலாந்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் பதிவாகி வருகிறது. நேற்று மணிப்பூரில் நிலநடுக்கம் பதிவான நிலையில் இன்று காலை 8.59 மணியளவில் நாகலாந்து மாநிலத்தில் உள்ள மோகோக்சுங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.