மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,753 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
புதிதாக 5,753 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,80,208 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,060 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,51,064 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 46,623 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 81,512 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் புதிதாக 1,135 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 618 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,75,707 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,52,127 பேர் குணமடைந்துள்ளனர். 10,673 பேர் பலியாகியுள்ளனர்.