மகாராஷ்டிரத்தில் அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் காண்காணித்து ஆய்வு செய்த பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி புணேவில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
"தீபாவளி சமயத்தில் பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நேரத்தில்கூட பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்யவுள்ளோம். அதன்பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும்.
தற்போது கரோனா 2-ம் அலை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது" என்றார் அஜித் பவார்.