உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ரஸ் பகுதியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச பாஜக அரசு பாதிக்கப்பட்டவர்களை முடக்கி வைத்து துன்புறுத்துகிறது. ஹாத்ரஸ் வழக்கில் நியாயமான பதிலை நாடே எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.