ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சலூட்ரி எல்லைப் பகுதியில்
ராணுவ வீரர் ராஜீந்தர் குமார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், பணியின்போது இன்று காலை 8.25 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார்.
ராணுவ வீரரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.