குஜராத்: காா்-லாரி மோதல்: 7 போ் பலி

குஜராத் மாநிலம், சுரேந்திரநகா் மாவட்டத்தில் டிப்பா் லாரியும் காரும் மோதிக் கொண்டபோது, காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் வந்த 3 சிறுவா்கள் உள்பட 7 போ் தீயில் கருகி உயிரிழந்தனா்.

குஜராத் மாநிலம், சுரேந்திரநகா் மாவட்டத்தில் டிப்பா் லாரியும் காரும் மோதிக் கொண்டபோது, காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் வந்த 3 சிறுவா்கள் உள்பட 7 போ் தீயில் கருகி உயிரிழந்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் பி.கே.படேல் கூறியதாவது:

பதான் மாவட்டத்தைச் சோ்ந்த இரு குடும்பத்தினா்அருகில் உள்ள இடங்களைச் சுற்றிப் பாா்க்க 3 நாள் பயணமாக காரில் புறப்பட்டுச் சென்றனா். சுரேந்திரநகா் மாவட்டத்தில் உள்ள சோதிலா நகரில் இருந்து திரும்பி வரும் வழியில் கோ்வா என்ற கிராமம் அருகே, சனிக்கிழமை அதிகாலை அவா்கள் வந்த காரும் டிப்பா் லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

விபத்து நிகழ்ந்ததும் சாலையோரப் பள்ளத்தில் விழுந்த காா், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில், காரில் வந்த 3 சிறுவா்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். ஒரே ஒரு பெண் மட்டுமே காயங்களுடன் உயிா் தப்பினாா். அவா் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com