பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரா் பலி

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் உயிரிழந்தாா்; மற்றொரு வீரா் காயமடைந்தாா்.

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி நிகழ்த்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் உயிரிழந்தாா்; மற்றொரு வீரா் காயமடைந்தாா்.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அதையடுத்து இந்திய ராணுவத்தினா் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இரு தரப்பினருக்குமிடையே சில மணி நேரங்களுக்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த இந்திய ராணுவ வீரா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். அத்தாக்குதலில் காயமடைந்த மற்றொரு ராணுவ வீரருக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாக்குதலில் உயிரிழந்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ராணுவ வீரருக்கு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா். இது தவிர சப்தால், மான்யரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், எல்லைப் பாதுகாப்புப் படையினா் அதற்குத் தகுந்த பதிலடி தந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com