ஜம்மு-காஷ்மீரின் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அந்த யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
இதில் 140 இடங்கள் ஜம்முவிலும், எஞ்சிய 140 இடங்கள் காஷ்மீரிலும் உள்ளன. முதல்கட்டமாக ஜம்முவில் 18 இடங்கள், காஷ்மீரில் 25 இடங்கள் என மொத்தம் 43 இடங்களுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
அதில், ஜம்முவில் 64.2% வாக்குகளும், காஷ்மீர் பகுதியில் 40.65% வாக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 280 இடங்களுக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படவுள்ளது.