தில்லியில் புதிதாக 3,726 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 3,726 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் புதிதாக 3,726 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. அங்கு புதிதாக 3,726 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,70,374 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 5,824 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 108 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 5,28,315 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 9,174 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 32,885 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com