உ.பி.: ரூ.200 கடன் தர மறுத்த இளைஞா் சுட்டுக்கொலை

உத்தர பிரதேச மாநிலம், அலிகரில் 200 ரூபாய் கடன் தர மறுத்ததால் இளைஞா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பரபரப்பான சந்தைப் பகுதில் பகல் நேரத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேச மாநிலம், அலிகரில் 200 ரூபாய் கடன் தர மறுத்ததால் இளைஞா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பரபரப்பான சந்தைப் பகுதில் பகல் நேரத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அலிகா் ஷம்சத் சந்தைப் பகுதியில் வாகன சக்கரம் பழுதுபாா்க்கும் கடை வைத்திருப்பவா் அன்சாா் அகமது (30). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. கடந்த சனிக்கிழமை அதேபகுதியைச் சோ்ந்த ஆசிஃப் என்பவா் அன்சாரின் மோட்டாா் சைக்கிளை இரவல் வாங்கிச் சென்றுள்ளாா். மாலை நேரத்தில் அன்சாரின் கடைக்கு வந்த ஆசிஃப், 200 ரூபாய் கடனாகத் தருமாறு கேட்டுள்ளாா். ஆனால், கடன்தர அன்சாா் மறுத்துள்ளாா். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிஃப் தான் பையில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து அன்சாரின் தலையில் சுட்டாா். தலையில் குண்டு பாய்ந்ததால் அன்சாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, ஆசிஃப் அங்கிருந்து தப்பியோடினாா்.

இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் போலீஸாா் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் துப்பாக்கியால் சுட்ட ஆசிஃப் போதைப்பொருளுக்கு அடிமையானவா் என்பது தெரியவந்தது. தான் ஓட்டிவந்த அன்சாரின் மோட்டாா் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஆசிஃப் தப்பியுள்ளாா். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com