எந்தெந்த மாவட்டங்களில் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து? விவரங்கள் இதோ...

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாளை( அக்.2) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்.2) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், திருவள்ளூர், திருநெல்வேலி, மதுரை திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 1 மற்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதிகளில் நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com