லடாக்: கிழக்கு லடாக் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே நேரிட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக போர் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
லடாக்கின், துர்பக் - ஷையாக் - தௌலத் பெக் ஓல்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் முச்சந்திப்புப் பகுதியில் இந்த போர் நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னத்தில், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் மற்றும் ஜூன் 15-ம் தேதி நடந்த போரின் விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவப் படைகளிடையே மே மாதம் முதல் மோதல்போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15-ம் தேதி இரவு இரு நாடுகளின் ராணுவ வீரா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 20 போ் வீரமரணம் அடைந்தனா்; 18 வீரா்கள் காயமடைந்தனா்.