பண்ருட்டி அருகே மனைவி வெட்டிக் கொலை: வழக்குரைஞர் வெறிச்செயல்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த வழக்குரைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்



நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த வழக்குரைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி வட்டம், சிறுதொண்டமாதேவி, வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தில்லைகண்ணு மகன் பாலதண்டாயுதம்(44), கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்த வீரமணி மகள் அருள்மொழி(40) என்பவருக்கும் கடந்த11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு முல்லைவனநாதன்(8), கோகுலகிருஷ்ணன்(6) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கொளக்குடி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக அருள்மோழி பணியாற்றி வந்தார். மனைவி மீது பாலதண்டாயுதத்திற்கு சந்தேகம் இருந்ததாம். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு தம்பதி இடையே வாய் சண்டை நடந்தது. இதில் கோபமடைந்த பாலதண்டாயுதம் கத்தியால் சரமாரியாக வெட்டியதில் அருள்மொழி உடலின் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.

மேலும் இடது கை துண்டானது. உயிருக்கு போராடிய அருள்மொழியை அங்கிருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து தந்தை வீரமணி அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பாலதண்டாயுதத்தை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com