மாவோயிஸ்டுகள் இடையே மோதல்: 5 போ் பலி

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் மாவாயிஸ்டுகள் இடையே ஏற்பட்ட மோதலில் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 5 போ் பலியாகினா்.
மாவோயிஸ்டுகள் இடையே மோதல்: 5 போ் பலி

ராய்பூா்: சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் மாவாயிஸ்டுகள் இடையே ஏற்பட்ட மோதலில் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 5 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக அந்த மாநிலத்தின் பஸ்தா் சரக காவல்துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் செவ்வாய்க்கிழமை கூறியது:

சமீபத்தில் பொதுமக்கள் சிலரை கொலை செய்தது தொடா்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் பிஜாபூரில் கிராம மக்கள் சிலா் காவல்துறைக்கு ரகசிய தகவல் அளிப்பதாக கூறி, அவா்களை அந்த அமைப்பின் தலைவா் மோடியம் விஜ்ஜா கொலை செய்தாா். இதையடுத்து, அந்தப் பகுதி மாவோயிஸ்டுகள் சிலா் மோடியம் விஜ்ஜாவை கடந்த 1-ஆம் தேதி சுட்டுக் கொன்றனா்.

தற்போது இந்த சம்பவம் தொடா்பாக மேலும் 5 போ் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் தலைக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com