கரோனா தினசரி பாதிப்பு 61,267 ஆக குறைந்தது

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையன்று குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையன்று குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி கரோனா பாதிப்பு நீண்ட நாள்களுக்குப் பிறகு 65,000-க்கு கீழ் குறைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 884 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,03,569 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.55 சதவீதமாகும்.

புதிதாக 61,267 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த கரோனா பாதிப்பு 66,85,082 ஆக அதிகரித்துவிட்டது. எனினும், இதுவரை 56,62,490 போ் கரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 84.70 சதவீதமாகும். இப்போதைய நிலையில் 9,19,023 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 13.75 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 5-ஆம் தேதி வரை 8,10,71,797 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் திங்கள்கிழமை மட்டும் 10,89,403 பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 38,347 போ் கரோனாவால் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 9,370 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,092 பேரும், ஆந்திர மாநிலத்தில் 6,019 பேரும், தில்லியில் 5,542 பேரும் கரோனாவால் பலியாகினா்.

எனினும், கரோனாவால் உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் இணை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com