ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு கரோனா பாதிப்பு

ஹரியாணா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த அறிகுறியும் இல்லாமல் தனக்கு தொற்று பாதிப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.


சண்டீகர்:  ஹரியாணா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்த அறிகுறியும் இல்லாமல் தனக்கு தொற்று பாதிப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சுட்டுரைப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், எனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்தது. காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லையென்றாலும், தொற்று உறுதியாகியுள்ளது. நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த ஒரு வாரமாக என்னிடம் தொடர்பிலிருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  
ஏற்கெனவே,  ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர், சட்டப் பேரவைத் தலைவர் கியான்சந்த் குப்தா, சில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலத்தைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 
குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com