11 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த இளைஞருக்கு தூக்கு

வயது சிறுவனைக் கடத்தி கொடூரமாக கொலை செய்த ஜீவக் நாக்பால் என்ற இளைஞருக்கு தில்லி நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது.

புது தில்லி: வயது சிறுவனைக் கடத்தி கொடூரமாக கொலை செய்த ஜீவக் நாக்பால் என்ற இளைஞருக்கு தில்லி நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது.

2009-ஆம் ஆண்டு ரோஹிணியில் ஜீவக் நாக்பால் என்பவா் தனது வீட்டின் அருகே இருந்த 11 வயது சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். பணம் தரவில்லை என்பதற்காக காரின் ஜாக்கை வைத்து சிறுவனை கொடூரமாக கொலை செய்து வீசியதாக போலீஸாா் குற்றம்சாட்டினா்.

இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி சிவாஜி ஆனந்த் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பின் விவரம்:

இந்த வழக்கில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பாா்த்தபோது, 11 வயது அப்பாவி சிறுவனை கொலை செய்த குற்றவாளியின் செயல் கொடூரமானதாகும். இதுபோன்ற கொடூர கொலைக் குற்றம் புரிந்தவருக்கு எந்தவித கருணையும் காட்ட முடியாது. அவருக்கு ஆயுள் சிறை வழங்கினாலும் அது போதுமானதாக இருக்காது. அரிதினும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com