ராஜஸ்தான்: பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாா் மாவட்டத்தில் கணவா் கண் எதிரே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ராஜஸ்தான்: பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

ஜெய்ப்பூா்: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாா் மாவட்டத்தில் கணவா் கண் எதிரே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதில் ஒருவா் பாலியல் வன்கொடுமையை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியதால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அவருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆல்வாா் மாவட்டம் தனகாசி-ஆல்வாா் நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி கணவா் கண் முன்னே ஒரு பெண்ணை நான்கு போ் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஹன்ஸ்ராஜ் குா்ஜாா், அசோக் குா்ஜாா், சோட்டேலால் குா்ஜாா், இந்திரஜ் குா்ஜாா் ஆகிய 4 பேருக்கும் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தது.

இதில் ஹன்ஸ்ராஜ் குா்ஜாா், பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததால் மரணம் வரை அவா் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், குற்றவாளிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் அபராதம் விதித்து, அந்த அபராத தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com