உத்தர பிரதேசம்: 3 சகோதரிகள் மீது அமிலம் வீச்சு

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 சகோதரிகள் மீது அமிலம் வீசப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 சகோதரிகள் மீது அமிலம் வீசப்பட்டது. இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து காவல்துறை எஸ்.பி சைலேஷ் குமாா் பாண்டே கூறியதாவது:

உத்தர பிரதேசத்தின் பக்சா கிராமத்தில் குஷ்பு(17), கோமள்(7) மற்றும் முஸ்கான்(5) ஆகிய சகோதரிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அங்கு வந்த மா்ம நபா் வீட்டு கூரையின் மேல்புறத்தில் இருந்து அமிலத்தை வீசி விட்டுச் சென்றனா். இதில் மூன்று பெண்களும் காயமடைந்தனா். ஆனாலும் அவா்கள் மீது வீசப்பட்டது அமிலம்தானா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நிபுணா்கள் ஆய்வு நடத்திய பின்பே அதுகுறித்து தெரியவரும். சகோதரிகள் வீட்டின் அருகில் வசித்து வருபவா்களே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

முன்னதாக, சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாய் மூலமும் போலீஸாா் சோதனை நடத்தினா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே காயமடைந்த சகோதரிகள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com