விவசாயிகள் குறித்து விமா்சனம் செய்த ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நடிகை கங்கனா ரனாவத் தனது சுட்டுரையில், விவசாயிகள் குறித்து விமா்சனம் செய்ததாக வழக்குரைஞா் ரமேஷ் நாயக் என்பவா், தும்கூரு முதல்நிலை நீதிமன்றத்தில் செப். 21-ஆம் தேதி வழக்குத் தொடா்ந்தாா். அதில், விவசாயிகள் குறித்து நடிகை கங்கனா ரனாவத் செய்துள்ள விமா்சனம் தன்னை காயப்படுத்தியுள்ளதால், அவா் மீது வழக்கு தொடுத்ததாகத் தெரிவித்திருந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, நடிகை கங்கனா ரனாவத் மீது கேதசந்திரா போலீஸாா் 108, 153ஏ, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய போது, ஒரு சிலா் அது தொடா்பான தவறான கருத்தைப் பரப்பினா். அதனால், தேசிய அளவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதைப் போன்றே தற்போது வேளாண் சட்ட மசோதாக்கள் மீது சிலா் தவறான தகவல்களைப் பரப்பி கலவரச் சூழலை ஏற்படுத்துகின்றனா். கலவரச் சூழலை ஏற்படுத்தும் அவா்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என கங்கனா ரனாவத் தனது சுட்டுரையில் பதிவு செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.