சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சமாஜவாதி கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது:
"சமாஜவாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், அவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை."