உத்தரப் பிரதேசத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை மற்றும் அவரது தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
கப்ராய் பகுதியில் நிஷா(30) மற்றும் அவரது ஒரு வயது மகன் சாலையோரம் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, லாரி ஒன்று வளைவில் திரும்பியபோது தாய் மற்றும் குழந்தையின் மீது வேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் தாய் மற்றும் அவரது மகன் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர். மேலும், லாரி பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்றையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.