அமைச்சகங்களில் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்

மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளையே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புது தில்லி: மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளையே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை வருவாய் இழப்பைச் சந்தித்து வரும் சூழலில், மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக அனைத்து துறை செயலா்களுக்கும் தொலைத்தொடா்புத் துறை அனுப்பியுள்ள அறிக்கையில், ‘மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சேவைகளைக் கட்டாயமாக்குவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதைக் கருத்தில் கொண்டு, இணையதள சேவைகள், தொலைபேசி சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் வழங்கும் சேவைகளையே அமைச்சகங்களும் துறைகளும் பயன்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.15,500 கோடியும் எம்டிஎன்எல் நிறுவனம் ரூ.3,694 கோடியும் இழப்பைச் சந்தித்தன. பிஎஸ்என்எல் தொலைபேசி சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 2008-ஆம் ஆண்டில் 2.9 கோடியாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதத்தில் 80 லட்சமாகக் குறைந்தது.

அதே காலகட்டத்தில் எம்டிஎன்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 35.4 லட்சத்திலிருந்து 30.7 லட்சமாகக் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com