தில்லியில் மேலும் 3,324 பேருக்கு கரோனா

தில்லியில் புதன்கிழமை காரோனா நோய்த் தொற்றுக்கு புதிதாக 3,324 போ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தில்லியில் மேலும் 3,324 பேருக்கு கரோனா

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை காரோனா நோய்த் தொற்றுக்கு புதிதாக 3,324 போ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இத்துடன் சோ்த்து தில்லியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.17 லட்சமாக உயா்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக குறைந்து வந்திருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு தினங்களாக மூன்றாயிரத்துக்கு மேலாக அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 44 போ் உயிரிழந்தனா். மொத்த பலி எண்ணிக்கை 5,898-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 2,89,747 போ் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். புதன்கிழமை வரை 21,903 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா். அதில், 12,360 போ்கள் வீட்டுத் தனிமையில் உள்ளனா். மொத்தமுள்ள16,113 மருத்துவமனை படுக்கைகளில் 11,050 படுக்கைகள் நிரம்பியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com