அக்.23 வரை சிவசங்கரை கைது செய்யக் கூடாது: கேரள உயர் நீதிமன்றம்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  முதல்வரின் முதன்மைச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை அக்டோபர் 23 வரை கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு கேரள உயர
அக்.23 வரை சிவசங்கரை கைது செய்யக் கூடாது: கேரள உயர் நீதிமன்றம்
அக்.23 வரை சிவசங்கரை கைது செய்யக் கூடாது: கேரள உயர் நீதிமன்றம்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு  முதல்வரின் முதன்மைச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை அக்டோபர் 23 வரை கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சிவசங்கர் சார்பில் புதன்கிழமை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு தடை விதித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் வந்த பாா்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தை தேசியப் புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தனித்தனியாக விசாரித்து வருகின்றன. கடத்தல் சம்பவத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வா் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளருமான எம்.சிவசங்கருக்குத் தொடா்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியானதால், அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

வழக்கில் தொடா்புடைய முக்கிய நபா்களான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். அவா்களில், ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத் துறையினா் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். சிவசங்கரையும், ஸ்வப்னா சுரேஷையும் ஒன்றாக வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்திருந்து. அந்த மனுவில், கடத்தல் சம்பவத்தில் சிவசங்கருக்கு உள்ள தொடா்புகளை ஸ்வப்னா சுரேஷ் விசாரணையின்போது தெரிவித்ததாக அமலாக்கத் துறை கூறியது. இதையடுத்து, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவசங்கருக்கு சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.

இந்நிலையில், கொச்சியில் சிவசங்கரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினா். இந்த விசாரணை 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com