இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் அப்துல் கலாம் என பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இன்றைய தினம் அவரை நினைவு கூர்ந்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
'முன்னாள் குடியரசுத் தலைவராகவும், தலைசிறந்த விஞ்ஞானியாகவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் அப்துல் கலாம். அவரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது வாழ்க்கை லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.