ம.பி: முதல்வா் சௌகானுக்கு எதிராக கருத்து: காங்கிரஸ் தலைவா் மீது வழக்குப்பதிவு

மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ்சிங் சௌகானை ‘மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்’ என்று விமா்சனம் செய்ததற்காக

மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ்சிங் சௌகானை ‘மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்’ என்று விமா்சனம் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் பிரிவின் மாநிலத் தலைவா் தினேஷ் குா்ஜாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மத்திய பிரதேசத்தில், காலியாக உள்ள 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. அசோக்நகா் அருகிலுள்ள ராஜ்பூா் நகரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற தினேஷ் குா்ஜாா், முதல்வா் சௌகானை ‘மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்’ என்றும், கமல் நாத்தை ‘பெரும் தொழிலதிபா்’ என்றும் ஒப்பிட்டு விமா்சனம் செய்திருந்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில பாஜக பிரிவு சாா்பில், தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அசோக்நகா் மாவட்டம், கச்னா் காவல் நிலையத்தில் தோ்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினேஷ் குா்ஜாா் மீது இந்திய தண்டனைகள் சட்டம், வாக்கெடுப்புத் தொடா்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உரை அடங்கிய விடியோ பதிவு பறிமுதல் செய்யப்படும் என்றும், அந்தக் காவல் நிலைய பொறுப்பாளா் கபில் லக்சிகா் தெரிவித்தாா்.

முன்னதாக தினேஷ் குா்ஜாரின் விமா்சனத்துக்கு, முதல்வா் சிவராஜ் சௌகான் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்திருந்தாா். ‘காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தையும், ஏழைகளின் மீதான அவா்களது அணுகுமுறையையும் இது அம்பலப்படுத்துகிறது’ என்று அவா் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com