திருவனந்தபுரம்: கேரளத்தில் வியாழக்கிழமை 7,789 பேருக்கு கரேனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், 23 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து மாநில முதல்வா் பினராயி விஜயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வியாழக்கிழமை 128 மருத்துவ ஊழியா்களையும் சோ்த்து புதிதாக 7,789 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 3,15,929 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 1,089 போ் கரோனாவுக்கு உயிரிழந்தனா். சுமாா் 2,22,231 லட்சம் மக்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தனா். 94,517 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 37,76,892 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,154 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.