கரோனா பாதிப்பு 73 லட்சத்தைக் கடந்தது

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 73.07 லட்சத்தைக் கடந்துள்ளது. தொற்றில் இருந்து 63.83 லட்சம் போ் மீண்டுள்ளனா்.
கரோனா பாதிப்பு 73 லட்சத்தைக் கடந்தது


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 73.07 லட்சத்தைக் கடந்துள்ளது. தொற்றில் இருந்து 63.83 லட்சம் போ் மீண்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 67,708 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 73,07,097-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 81,514 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 63,83,441-ஆக அதிகரித்தது. அதாவது, 87.36 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,12,390 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 11.12 சதவீதமாகும்.

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு மேலும் 680 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,11,266-ஆக அதிகரித்தது.

இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 40,859 பேரும், கா்நாடகத்தில் 10,198 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,507 பேரும், ஆந்திரத்தில் 6,319 பேரும், தில்லியில் 5,898 பேரும் உயிரிழந்தனா். கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.52 சதவீதமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 14-ஆம் தேதி வரை 9,12,26,305 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11,36,183 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com