உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பட்டியலின சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை அளித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து இன்று காலை மற்றொரு பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்.
இதனிடையே இன்று மாலையே பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை நிகழ்வு அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்செண்டி பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதைக்காக வயலுக்குச் சென்றுள்ளார்.
அப்போது கோவிந்த்(19), சிவ் போதன் (30) ஆகிய இருவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் சச்செண்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த பரிசோதனை அறிக்கை இன்னும் வராத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைந்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.