கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு தொற்று உறுதி 

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 73,70,469 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து 64,53,780 போ் மீண்டுள்ளனா்.
கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 63,371 பேருக்கு தொற்று உறுதி 


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 73,70,469 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து 64,53,780 போ் மீண்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,371 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 73,70,469-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 81,514 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை  64,53,780-ஆக அதிகரித்தது. அதாவது, 87.56 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,04,528 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 10.92 சதவீதமாகும்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு மேலும் 895 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,12,161-ஆக அதிகரித்தது. அதாவது 1.52 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 15-ஆம் தேதி வரை 9,22,54,927 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 10,28,622  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com