கர்நாடகத்தில் இன்று மேலும் 7542 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று மேலும் 7542 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,51,390 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு மேலும் 73 பேர் பலியாகியுள்ளனர்.
இதன் மூலம் பலியானோரின் எண்ணிக்கை 10,356 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து இன்று ஒரே நாளில் 8580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,28,588 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 1,12,427 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.