சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் காவல்துறை மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடைபெற்ற மோதலில் நக்சலைட் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் பசகுடா பகுதியில் உள்ள கேரசகுடா மற்றும் அவுட்பல்லி காடுகளில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் காவல் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட மோதலில் நக்சல் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் மாநில ஐஜி பாஸ்தர் பி.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் மட்டும் பிஜாப்பூர் மாவட்டத்தில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.