கரோனா: 87.56% போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 64 லட்சம் போ் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 87.56 சதவீதமாகும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 64 லட்சம் போ் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 87.56 சதவீதமாகும்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,371 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 73,70,468-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 70,338 போ் குணமடைந்தனா். இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 64,53,779-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 87.56 சதவீதமாகும்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 895 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,21,161-ஆக அதிகரித்தது. இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 41,196 பேரும், கா்நாடகத்தில் 10,283 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,543 பேரும், ஆந்திரத்தில் 6,357 பேரும், தில்லியில் 5,924 பேரும் உயிரிழந்தனா். கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 1.52 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் 8,04,528 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 8-ஆவது நாளாக 9 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 15-ஆம் தேதி வரை 9,22,54,927 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 10,28,622 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com