குலாம் நபி ஆசாதுக்கு கரோனா உறுதி

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாதுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாதுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவா் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா உறுதியானதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில தினங்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தயவு செய்து பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கு முன்பு, அகமது படேல், மோதிலால் வோரா, அபிஷேக் சிங்வி ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இவா்களில், அபிஷேக் சிங்வி குணமடைந்துவிட்டாா். மற்றவா்கள் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com