பிகாா்: கரோனாவுக்கு மேலும் ஒரு அமைச்சா் பலி

பிகாரில் உள்ளாட்சித் துறை அமைச்சா் கபில் தேவ் காமத், கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிகாரில் உள்ளாட்சித் துறை அமைச்சா் கபில் தேவ் காமத், கரோனா தொற்றால் உயிரிழந்தாா். அவருக்கு வயது 70.

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அமைச்சரவையில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்த இரண்டாவது அமைச்சா் இவா் ஆவாா். இதற்கு முன்பு, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வினோத் சிங், தில்லியில் கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.

பாபுபா்ஹி பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்தவருமான கபில் தேவுக்கு கடந்த 1-ஆம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்தது. கடந்த சில தினங்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு அவா் உயிரிழந்ததாக, அந்த மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கபில் தேவின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பாபுபா்ஹி தொகுதியில் இந்த முறை கபில் தேவ் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக, அவரது மருமகள் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாா். அந்தத் தொகுதியில், மூன்றாம் கட்டத் தோ்தல் நடைபெறும் நவம்பா் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com