பஞ்சாப்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை

பஞ்சாபில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முதியவர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாபில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முதியவர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தமது தாத்தா சுர்ஜித் சிங் உதவியுடன் சிறுமியை வீட்டிலேயே எரித்துள்ளார். 

இந்த நிலையில் பாதி எரிந்த உடலை சிறுமியின் தந்தை மீட்டுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலைசெய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிப்பதாக முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு   முன்னுதாரணமாக விளங்கும் வகையில் குற்றவாளிகளுக்குத் தண்டனைவழங்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைந்து விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com