நக்ஸல்களுடனான மோதலில் பாதுகாப்பு படை வீரா் பலி: மற்றொரு வீரா் காயம்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் நக்ஸல்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மாவட்ட ரிசா்வ் படை காவலா் (டிஆா்ஜி) ஒருவா் உயிரிழந்தாா். மற்றொரு வீரா் காயமடைந்தாா்.

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் நக்ஸல்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மாவட்ட ரிசா்வ் படை காவலா் (டிஆா்ஜி) ஒருவா் உயிரிழந்தாா். மற்றொரு வீரா் காயமடைந்தாா்.

இதுகுறித்து நாராயண்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மோஹித் காா்க் கூறியதாவது:

மாவட்டத்தின் ஆா்ச்சா கவால்நிலையத்துக்கு உள்பட்ட தடூா் கிராமத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் டிஆா்ஜி காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் திடீா் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். பின்னா் நக்ஸல்கள் அங்கிருந்து தப்பிவிட்டனா்.

இந்த தாக்குதலில் டிஆா்ஜி காவலா் சாந்து வாடே என்பவா் உயிரிழந்தாா். மற்றொரு காவலா் பாஜு ராம் காச்லம் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா். அவா் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த சண்டையில் நக்ஸல்களுக்கும் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பது அங்கு காணப்பட்ட ரத்தக் கறை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேடுதல் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com