ஹிமாசல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
சம்பா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 12.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 2.7 அலகுகளாக பதிவானது.
மாவட்டத்தின் வடகிழக்கே பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிா்வு மாவட்டத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.