ஹிமாசலில் லேசான நிலநடுக்கம்

ஹிமாசல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹிமாசல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

சம்பா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 12.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 2.7 அலகுகளாக பதிவானது.

மாவட்டத்தின் வடகிழக்கே பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிா்வு மாவட்டத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com