நாடு முழுவதும் களைகட்டியது பண்டிகை : சமூக இடைவெளியை மறந்த மக்கள்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறையாத நிலையில் திபாவளி மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகளுக்காக பொருள்கள் வாங்க பெருநகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கியுள்ளனர்.
தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தைக்கு வந்த மக்கள்
தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தைக்கு வந்த மக்கள்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறையாத நிலையில் திபாவளி மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகளுக்காக பொருள்கள் வாங்க பெருநகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கரோனா தொற்று குறையாத நிலையில் பண்டிகை காலத்திற்காக பொருள்கள் வாங்க மக்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். 

தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தையில் பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்காக வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூடியுள்ளனர்.

அதே போல் மற்றொரு முக்கிய நகரமான கொல்கத்தாவிலும் துர்கா பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டுகளில் பூ வாங்குவதற்கு மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டமாக வெள்ளிக்கிழமை வந்தார்கள்.

இதனால், நோய்த்தொற்று அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com