பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் பொருளாதார சரிவின் தொடக்கம்: ராகுல்

​இந்தியப் பொருளாதாரத்தின் சரிவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்தான் தொடங்கியது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
​இந்தியப் பொருளாதாரத்தின் சரிவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்தான் தொடங்கியது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். (கோப்புப்படம்)
​இந்தியப் பொருளாதாரத்தின் சரிவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்தான் தொடங்கியது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். (கோப்புப்படம்)


இந்தியப் பொருளாதாரத்தின் சரிவு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்தான் தொடங்கியது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"ஜிடிபி -23.9. பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் அழிவு தொடங்கியது. அப்போது முதல் அடுத்தடுத்து தவறான கொள்கைகளையே அரசு அறிமுகப்படுத்தியது" என்றார்.  

இதேபோல், பொருளாதார சரிவுக்கு அரசுதான் காரணம் என பிரியங்கா காந்தியும் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"6 மாதங்களுக்கு முன்பே 'பொருளாதார சுனாமி' என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். அரசு வெறும் கண்துடைப்புக்காக தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. பாஜக அரசுதான் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இதுவரை இல்லாத வகையில் 23.9 சதவிகிதம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com