ராஜஸ்தானில் புதிதாக 1,511 பேருக்கு கரோனா: மேலும் 12 பேர் பலி

ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,511 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் புதிதாக 1,511 பேருக்கு கரோனா: மேலும் 12 பேர் பலி
ராஜஸ்தானில் புதிதாக 1,511 பேருக்கு கரோனா: மேலும் 12 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,511 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்றைய (புதன்கிழமை) நிலவரப்படி புதிதாக 1,511 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 84,674-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 12,919 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து புதிதாக 2,550 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 70,674-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 12 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,081-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com